Posts

Showing posts from October, 2025

பொன்னழகன் வண்ணத்துப்பூச்சி

Image
தென்னிந்தியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சியான பொன்னழகன் (Southern Birdwing) மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எழுமலை நகருக்குள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. பொன்னழகன் வண்ணத்துப்பூச்சி தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும் ஒரு அகணிய உயிரினமாகும். Photo by Mr. A. Naveen at Elumalai, Madurai district on 04.10.2025 பொன்னழகன் வண்ணத்துப்பூச்சி ஏற்கனவே மதுரை சதுரகிரி மலை, வாசிமலை ஆகிய மலையடிவாரத்தில் கடந்த வருடம் ஆவணம் செய்யப்பட்டது. பொதுவாக மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில், மலையடிவாரத்தில் காணப்படும் பொன்னழகன் வண்ணத்துப்பூச்சிகள், குடியிருப்புகள் நிறைந்த நகருக்குள் காண்பது அரிது. இந்நிலையில் அடர்ந்த குடியிருப்புகள் சூழ்ந்த எழுமலை நகருக்குள் ஒரு மரத்தில் பொன்னழகன் பட்டாம்பூச்சியை மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர் புகைப்படக் கருவி மூலம் பதிவு 04.10.2025 அன்று பதிவு செய்துள்ளனர். எழுமலை பகுதியில் எடுக்கப்பட்ட பொன்னழகன் பட்டாம்பூச்சியின் புகைப்படம் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிகளில் இரண்டாவது பெரிய வண்ணத்துப்பூச்சியாக பொன்னழகன் அறியப்படுகிறது. 190 மில்லிம...