Posts

Showing posts from December, 2025

வண்ணத்துப்பூச்சிகள் அறிதல்

Image
நேற்று (14.12.2025) ஞாயிறு காலை வண்ணத்துப்பூச்சிகள் அறிதல் நிகழ்விற்காக மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், பாலமேடு ஒன்றியம், வலையப்பட்டி ஊரில் உள்ள மஞ்சமலையன் கோயிலுக்கு சென்று இருந்தோம். சுமார் 40 பேர் வரை இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். மஞ்சமலை கோயில் வனப்பகுதியின் எல்லைக்குள் உள்ளதால், வனத்துறைக்கு முறையாக தெரிவித்து சென்றோம். இந்நிகழ்வில் TNBS அமைப்பில் இருந்து திரு. சத்திய செல்வம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கெடுத்து, அனைவருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து நேரிடையாக விளக்கினார். சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் பயின்று வரும் காட்டுயிர் ஆய்வாளர் திரு. கிஷோர் அவர்கள் மஞ்சமலை பாலூட்டிகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விளக்கினார். மாவட்ட பசுமைக் குழு உறுப்பினர் கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் மஞ்சமலை தாவரங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். வண்ணத்துப்பூச்சிகள் குறித்து ஆவணம் செய்து வரும் திரு. அழகப்பன், விஸ்வா, கமலேஷ், சக்திவேல் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். யாதும் மாரிமுத்து அவர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் 46 வக...