சோமகிரி மலை & பறம்புக் கண்மாய் - பண்பாட்டுச் சூழல் நடை

சோமகிரி மலையும் பறம்புக் கண்மாயும் 

    மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட சோமகிரி மலைக்கு 09.02.2025 அன்று காலை பண்பாட்டு சூழல் நடையின் 28வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 50 பேர் வரை பங்கெடுத்தனர்.

இந்த நடையில் பெருங்கற்கால சின்னங்கள், பறம்பு கண்மாய் பாறைக் கல்வெட்டுகள், சோமகிரி மலைக் கல்வெட்டு, மலையில் கோட்டைச் சுவர்கள், கற்கோயில்கள், மலையுச்சி தீபத்தூண் கல்வெட்டு ஆகியவற்றை ஆவணம் செய்தோம். கார்த்திகை தீபத்திருவிழா, கருப்பு கோயில் மாசி திருவிழா, பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு, நவ்வா கந்தூரி விழா என பல்வேறு கிராமத் திருவிழாக்கள் குறித்து கேட்டறிந்து ஆவணம் செய்தோம். 

பல்லுயிரியங்கள் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட தாவரங்கள், 80க்கும் மேற்பட்ட பறவைகள், 30க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள், 25க்கும் மேற்பட்ட பாலூட்டி விலங்குகள் என சோமகிரி மலையின் பல்லுயிரிய வளத்தை ஆவணம் செய்தோம். 


சோமகிரி மலை: 

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சியில் அமைந்துள்ளது சோமகிரி மலை. மலையின் வடக்கு பகுதி பாறை குன்றாகவும், தெற்கு பகுதி மரங்கள், புதர்கள் நிறைந்த பசுமை பரப்பாகவும் விளங்குகிறது. மலையின் உச்சிக்கு செல்லும் பாதை கரடுமுரடாக இருக்கிறது. உச்சி மலையில் ஒரு சிறிய பாறைக்கு அடியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த வெள்ளை பாறை ஓவியங்கள் காணப்படுகிறது. மலையின் உச்சியில் கோட்டை சுவர்களும், கோட்டை கடந்து செல்லும் வழியில் இயற்கையான சுனையும், சுனைக்கு மேலே சன்னதியில் முருகன் கோயில், பள்ளிக்கூடம் என்று அழைக்கப்படும் பகுதியும் உள்ளது. முருகன் கோயிலுக்கு ஏறிச் செல்ல இராஜராஜ சோழன் காலத்தில் மலையப்ப சம்பு என்பவன் பாறையில் படிக்கட்டுகள் வெட்டிக் கொடுத்திருக்கிறார். ஆயிரமாண்டுகள் பழமையான அந்த படிக்கட்டுகள் அருகே அதற்க்கான தமிழ் கல்வெட்டும் காணப்படுகிறது. 

மலையின் அடிவாரத்தில் வடமேற்கு பகுதியில் ஆயிரமாண்டுகள் பழமையான பறம்பு கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கிபி 1238) கலிங்கு அமைந்து கொடுத்த செய்தியை கூறும் கல்வெட்டு கண்மாயின் கலிங்கு பாறையில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் அருகே விஜயநகர மன்னர் ஆட்சி செய்த கிபி 1415 ஆம் ஆண்டில் கண்மாயின் பராமரிப்பிற்க்காக கொடுக்கப்பட்ட நிலத்தானம் பற்றிய செய்தியை கூறும் மற்றொரு கல்வெட்டு காணப்படுகிறது. மேலும் மலையின் வடமேற்கு சரிவில்  கருப்பு கோயில், சிவன் கோயில் உள்ளது. மலையின் வடகிழக்கு பகுதியில் மலையப்பீர் (கந்தூரி நவ்வா) உள்ளது. தெற்குதிசையில் அழகுநாச்சியம்மன், பட்டத்தரசி அம்மன் கோயில், தம்மம் (தம்மத்து கந்தூரி), செங்கையா கோயில் உள்ளது. 


சோமகிரி மலை நிலவியல் விவரம்:

  • பரப்பளவு: 210 ஏக்கர்
  • சுற்றளவு: 4,044 மீட்டர் 
  • உயரம்: சுமார் 1000 அடி 
  • அட்சய & தீர்க்க ரேகை: 10.098976, 78.302565 
  • புல எண்: 586
மேலேயுள்ள விவரங்கள் கூகுள் வரைபடம் (Google Earth Map) துணைக்கொண்டு அளவிடப்பட்டது.  சோமகிரி மலை & பறம்பு கண்மாய் சர்வே எண் 586 இல் வருவாய்த்துறை வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. (TamilNilam Geo App)

சோமகிரி மலை பாறை ஓவியங்கள்: 

தொல் மனித சமூகம் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கிய முதல் கலை வடிவம்தான் பாறை ஓவியம். மொழியில் எழுத்துக்கள் உருவாகுவதற்கு முன்பே உருவான காட்சி மொழி தான் பாறை ஓவியங்கள். பழங்கால மக்கள் தங்களின் வாழ்வியல் நிகழ்வுகள், சிந்தனை, கற்பனை, நம்பிக்கை, ஆய்வுக் குறிப்புகள் ஆகியவற்றை குகையின் பாறைகளில் ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர். அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளும் வரலாற்று ஆதாரமாக பாறை ஓவியங்கள் விளங்குகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலம் துவங்கி அண்மை காலம் வரையிலான பாறை ஓவியங்கள் உலகெங்கும் கண்டறியப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் பொதுவாக சிகப்பு, வெள்ளை, கருப்பு, மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. வட இந்தியாவில் பச்சை நிறத்திலும் கூட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பாறை ஓவியங்களின் காலம் சுமார் 40,000 ஆண்டுகள் துவங்கி அண்மைக்காலம் வரை மிக நீண்டதொரு காலக்கட்டத்தை கொண்டதாகும். பாறை ஓவியங்கள் வரையப்பட்ட காலத்தை சரியாக கணிக்க கார்பன் டேட்டிங் உள்ளிட்ட அறிவியல் முறையே சிறந்தது.  தற்போது கால கணிப்பு செய்யும் முறையானது, ஓவியத்தில் காட்டப்பட்டிருக்கும் காட்சியை, இது போல மற்ற இடங்களில் கண்டறியப்பட்ட ஓவியங்களுடன் ஒப்பிட்டும், அங்கே கிடைக்கும் தொல்லியல் சான்றுகளைக் கருத்தில் கொண்டும் தோராயமாக ஒரு காலகட்டத்தைக் குறிப்பிடும் ஒப்பீட்டு முறையே தமிழ்நாட்டில் வழக்கில் உள்ளது. அவ்வகையில் சோமகிரிமலையில் காணப்படும் வெள்ளை பாறை ஓவியங்கள் பெருங்கற்காலத்தை சேர்ந்தவையாகும். அதன் காலம் சுமார் கிமு 1000 முதல் கிபி 300 வரை இருக்கலாம். 


சோமகிரி மலையின் உச்சியில் உள்ள கோயில் மண்டபத்தை கடந்து வடபக்கமாக (வலப்புறமாக) நடந்து சென்றால் காடி வெட்டப்பட்டது போன்ற பாறை வரும். அப்பாறையின் பின்புறம் குடைபோல கவிழ்ந்து கிடக்கும் பாறை புடவில் வெள்ளை நிற பாறை ஓவியங்கள் காணப்படுகிறது. நின்ற நிலையில் இரண்டு கைகளை மேலே தூக்கிய வண்ணம் ஒரு மனித உருவம் காட்டப்பட்டுள்ளது. நின்ற நிலையில் இன்னும் சில மனித உருவங்கள் உள்ளன. மயில் போன்ற உருவமும் வரையப்பட்டுள்ளது. சமைப்பதற்காக மூட்டிய தீயில் பழமையான பாறை ஓவியங்கள் காணப்படும் பாறைகள் முழுதும் கரும்புகை கறை சூழ்ந்துள்ளது, பழமையான ஓவியத்தின் மீது தற்காலத்தில் மனிதர்கள் கிறுக்கி கிறுக்கல் காரணமாக பழமையான பாறை ஓவியங்களை அடையாளம் காண முடியவில்லை என தொல்லியல் அறிஞர் திரு. காந்திராஜன் அவர்கள் தெரிவித்தார். இப்பாறை ஓவியங்களை இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் திரு. அபிஷேக் அவர்கள் கடந்த ஜூலை மாதம் ஆவணம் செய்தார். எஞ்சியிருக்கும் பாறை ஓவியங்களை ஊராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு தொல்லியல்துறையும் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.









மலையாண்டியும் முருகனும்:
முருகன், குமரன், வேலன் என பல பெயர்கள் முருகனுக்கு உண்டு. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பது தமிழ் வழக்கு. முருகன், ஆண்டிச்சாமி, மலையாண்டி, வெள்ளிமலையாண்டி என்ற பெயர்களில் மேலூரை சுற்றியுள்ள மலைக்குன்றுகளின் உச்சியில் கோயில் இருக்கிறது. கோயில் என்பது வெட்டவெளியாகவோ, மரத்தடியாகவோ இருக்கிறது. சில இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவ்விடத்தில் வேல் நட்டு வைத்து வழிபடும் வழக்கமுள்ளது. அவ்வாறு உள்ள எல்லா மலைக்குன்றுகளிலும் தீபமேற்றும் விளக்குத் தூணும், கார்த்திகை மாதம்  தீபம் ஏற்றும் திருவிழாவும் நடைபெறுகிறது. சுக்காம்பட்டி கோட்டைமலை, நாவினிபட்டி மூக்காண்டிமலை, பால்குடி அருவிமலை, சேக்கிபட்டி பனிமலைக்குட்டு, தேனக்குடிபட்டி மலை, நரசிங்கம்பட்டி முன்னமலை, குறிச்சிபட்டி வெள்ளைமலை, இடையப்பட்டி வெள்ளிமலை, குன்னக்குடிபட்டி மலை, பொட்டப்பட்டி வெள்ளிமலை என மேலூரை சுற்றியுள்ள பல குன்றுகளில் முருகன் மற்றும் ஆண்டிச்சாமி என்ற பெயரில் வேல் வழிபாடும் கார்த்திகை மாதம் தீப ஏற்றும் திருவிழாவும் நிகழ்வதை காணலாம்.  

நாவினிபட்டி மூக்காண்டிமலை


பால்குடி அருவிமலை

சோமகிரி முருகன் கோயில்:
சோமகிரிமலையின் உச்சியிலும் ஆதியில் வேல் வைத்து வழிபடும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். பின் உருவ வழிபாட்டு தோன்றி முருகன் கோயில் உருவாகி இருக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சி மலையில் குடிசை வடிவில் இருந்த கோயிலுக்குள் வெங்கலத்திலான முருகன் சிலை இருந்ததாக இவ்வூரைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் ஜெகதீசன் அவர்கள் என்னிடம் சொன்னார். பின்னாளில் ஊருக்குள் ஏற்பட்ட பூசல் காரணமாக முருகன் சிலை அடிவாரத்தில் ஊரின் மந்தைக்கு கொண்டு வரப்பட்டது. அச்சிலையின் தோற்ற வடிவத்தை நோக்குகிற போது இந்த சிலை சுமார் 700 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். மலையின் மேலே இருந்த முருகன் பெருமானுக்கு காவல் தெய்வமாக மலையின் கீழே கருப்பணசாமி வீற்று இருக்கிறார் என தொல்லியல் அறிஞர் ஜெகதீசன் அவர்கள் தெரிவித்தார். இப்போது மலையின் மேலே கற்களால் கட்டப்பட்ட மூன்று சன்னதிகள் இருக்கின்றன. அதில் நடுவில் உள்ள சன்னதியில் விநாயகர் சிலை இருக்கிறது. இந்த சன்னதியின் பின்னே உள்ள இடத்தை பள்ளிக்கூடம் என்று ஊரில் அழைக்கிறார்கள். ஆண்டுதோறும் சோமகிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெறுகிறது. மேலவளவு சோமகிரி கருப்பு கோயில் திருவிழா, மஞ்சுவிரட்டு மேலூர் பகுதியில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்வுகளாகும்.







சோமகிரி கோட்டை:
சோமகிரி மலையின் மேலேயுள்ள கோயிலை அடையும் முன் ராஜராஜ சோழன் காலத்து பாறை படிக்கட்டுகளும், அதனை கடந்து சென்றால் கோட்டையின் நுழைவாயிலும், அதில் இரும்பு கம்பியிலான கதவுவும், சுற்றிலும் கோட்டைச் சுவரும் காணப்படுகிறது. இக்கோட்டையின் காலம் அறிய முடியவில்லை. இக்கோட்டையின் நுழைவாயிலை அடையும் முன் பாறையில் வெட்டப்பட்டுள்ள படிக்கட்டுகள் 1000 ஆண்டுகள் பழமையானவை என்பதை படிக்கட்டுகள் அருகேயுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.  









முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு:
சோமகிரி மலையின் உச்சியில் புதிய இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு ஒன்று அண்மையில் (2025) மதுரை இயற்க்கை பண்பாட்டு அறக்கட்டளையை சேர்ந்த தமிழ்தாசன் மற்றும் தேவி அறிவுச்செல்வம் ஆகியோர் தங்களது களப்பயணத்தின் போது இக்கல்வெட்டைக் கண்டறிந்தனர். கண்மாய்ப்பட்டியைச் சேர்ந்த பாலா இந்த கல்வெட்டை கண்டறிய உதவினார். இக்கல்வெட்டில் ''இராஜராஜ மும்முடிச் சோழனின் படைத்தலைவன் வீரநாராணப் பல்லவரையன் குறிக்கப்படுகிறான். அவன் படை எடுத்து வெற்றி கொண்ட மலையப்ப சம்பு என்பவன் மலையில் உள்ள கல் படிக்கட்டுகளை வெட்டுவித்தான்'' என்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு இப்பகுதியில் கிடைக்கும் இராசராச சோழனின் அரிதான கல்வெட்டாகும். இராசராச சோழன் பாண்டிய நாட்டை கி.பி. 988 ஆம் ஆண்டில் வெற்றி கண்டான். அன்றிலிருந்து மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை (கி.பி.1218) பாண்டியநாடு சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. முதலாம் இராஜராஜனுக்கு மும்முடிச் சோழன் என்ற பட்டப்பெயரும் உண்டு. அப்பெயரோடு சேர்த்து இங்கு இராஜராஜன் குறிப்பிடப்படுகிறான். இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டாகும். இக்கல்வெட்டை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் ரா.உதயகுமார் மற்றும் தி.முத்துப்பாண்டி ஆகியோர் இக்கல்வெட்டைப் மைப்படி எடுத்தனர், அவர்களுடன் மேலவளவு கோபால், சிவன், நித்தின் ஆகியோர் உடன் இருந்தனர். பா.நா.வ ஆய்வு மையத்தின் செயலர் சாந்தலிங்கம் இக்கல்வெட்டைப் படித்துப் பொருள் கூறியுள்ளார்.






பறம்புமலையும், பிரான்மலையும்: 
ஈராயிரமாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாரி மன்னன் பறம்புமலையில் இருந்து பறம்புநாட்டை ஆட்சி செய்தான் என்றும் அவனது பறம்புநாட்டில் முன்னூறு ஊர்கள் இருந்தன என்றும் அவன் நாட்டில் பல குன்றுகளும், மலைகளும் இருந்தன என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. அதனையொட்டி பிரான்மலையே சங்க கால பாரி மன்னன் ஆட்சி செய்த பறம்புமலை என்று கருத்து தமிழறிஞர்களிடையே நிலவுகிறது. பறம்பு, பிறம்பு, பிரான் என திரிந்து பறம்புமலை கால ஓட்டத்தில் பிரான்மலை என  மாறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. பறம்புமலைதான் இன்றைய பிரான்மலை என்பதற்கு வேறு வலு சேர்க்கும் ஆதாரங்கள் பெரியளவில் இல்லை. 

பிரான்மலையில் பிற்கால பாண்டியர், விஜயநகர பேரரசு என பல மன்னர்களின் காலத்திய ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன.  ஆனால் கல்வெட்டுகள் கொடுங்குன்றம் என்றே பிரான்மலையை குறிப்பிடுகின்றன. ஆனால் பறம்பு மலை மருவி பிரான்மலை ஆகியிருக்கலாம் என்பதை ஏற்கும் சான்றுகள் நமக்கு தேவை. பிரான் என்பது வடமொழிச் சொல். பிரான் என்றால் தலைவன், பிராட்டி என்றால் தலைவி என பொருள். கோயில் கொண்டுள்ள கொடுங்குன்றநாதரின் மலை என்பதனை குறிக்கும் விதமாக பிரான்மலை என வழங்கியிருத்தல் வேண்டும். அது பறம்புமலையின் திரிபாக இருக்க வாய்ப்பு குறைவு. பிரான்மலை அருகேயுள்ள ஒரு மலையின் பெயர் கண்ணபிரான் குட்டு. மலைக்கு பிரான் என பெயர் வைக்கும் வழக்கம் இப்பகுதியில் இருப்பதை காண முடிகிறது. 

சோமகிரி மலை அடிவாரத்திலுள்ள பறம்பு கண்மாய்க்கு தெற்கேயுள்ள உள்நாட்டு பிரிவுகளை தென்பறப்பு நாடு, வடக்கேயுள்ளதை வடபறப்பு நாடு என்று பிற்பாண்டியர் கால கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. பறப்புமலையின் அடிவாரத்தில் உள்ள கண்மாய் ஆதலால் பறம்பு கண்மாய் என பெயர் வந்திருக்கலாம். இன்று சோமகிரி என்று அழைக்கப்படும் மலையே பாரி மன்னன் ஆட்சி செய்த சங்ககால பறம்புமலையாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர் ஜெகதீசன் அவர்கள் ஒரு கருதுகோளை முன்வைக்கிறார்.

சோமகிரியும் மேமலையும்: 
சோமகிரி மலை அமைந்துள்ள ஊரின் பெயர் இன்று 'மேலவளவு' என்று அழைக்கப்படுகிறது. பறம்பு கண்மாய் கலிங்கில் காணப்படும் கிபி 13ஆம் நூற்றாண்டு பிற்பாண்டியர் கால கல்வெட்டு இவ்வூரின் பெயர்  'திருநாராயண மங்கலம்' என்று குறிப்பிடுகிறது. அதற்கு முன்பு இவ்வூரின் பெயர் என்ன என்பது தெரியவில்லை. பாண்டியர் மன்னர் வீழ்ச்சிக்கு பிறகு, சோழ மன்னரின் ஆட்சியின் கீழ் பாண்டிய நாடு செல்கிறது. பாண்டியர் நாட்டில்,  சோழ மன்னர்களின் படைவீர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். நாட்டு நிர்வாகம் சோழ மன்னர்களின் படைவீர்கள் கைகளுக்கு செல்கிறது. 

மேலவளவு பகுதியில் அமைந்த மலைக்குன்றுக்கு பெயர் சோமகிரி ஆகும். சோமன் + கிரி = சோமகிரி. சோமகிரி என்பது  வடமொழி வடிவம். தமிழல்ல.  சோமன் என்பது சந்திரனைக் குறிக்கிறது. சோமன் என்ற சொல் சிவனையும் குறிக்கும். சைவ சமயத்தில், சிவன் பார்வதி சேர்ந்திருக்கும் வடிவத்திற்கு சோமாஸ்கந்தர் என்று பெயர். எனில் சோமகிரி மலையின் முந்தைய பெயர் என்ன? பறம்புமலையின் அடிவாரத்தில் உள்ளதால் பறம்பு கண்மாய் என பெயர் வந்திருக்கலாம், பாரி மன்னன் ஆட்சி செய்த பறம்புமலை இன்றைய சோமகிரி என முன்வைக்கப்படும் கருத்து ஆய்வுக்குரியது. மூன்று இடங்களில் வெள் அருவி விழும் பறம்புமலை என சங்க  பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் சோமகிரி மலை பாறைக் குன்றகவே விளங்குகிறது. பல குன்றுகளும் மலைகளும் சூழ்ந்த பாரியின் நாட்டில் சோமகிரி மலையும் ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் இதுவே பறம்புமலையக இருந்திருக்க வாய்ப்பில்லை. 

இன்று சோமகிரி கருப்பு என்று அழைக்கப்படும் கருப்பசாமியை மேமலை கருப்பு என்றே உள்ளூர் மக்கள் பேச்சு வழக்கில் அழைக்கிறார்கள். மேமலையின் அடிவாரத்தில் உள்ள கருப்பணசாமி என்பதால் மேமலை கருப்பு என்று உள்ளூர் மக்கள் அழைப்பதாக தெரிகிறது. பிற்கால பாண்டியர் கல்வெட்டுகளில் அழகர் திருவிடையாட்டம் (அழகர் கோயிலுக்கு தனமாக) திருநாராயண மங்கலம் என்றே இவ்வூர் அழைக்கப்படுகிறது. நரசிங்கம்பட்டியில் உள்ள மலையை பெருமாள்மலை என அழைக்கிறார்கள். சைவ சமய எழுச்சியின் காரணமாக இம்மலையை சைவ சமயத்தோடு தொடர்புடைய மலையாக காட்டும் முயற்சிகளின் விளைவாக சோமகிரிமலை என பெயர் வந்து இருக்கலாம். எனவே சோமகிரி மலையின் பழைய பெயர் மேமலையாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 


பறம்பு கண்மாய்:
மேலவளவு கிராமத்தில் சோமகிரிமலை குன்றுக்கும், முறிமலை குன்றுக்கும் இடையில் உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பறம்பு கண்மாய் வைகை வடிநில கோட்டத்தில் உள்ள உப்பாறு உப வடிநிலம் வாயிலாக பயன்பெறும் நீர்நிலையாகும். அழகர்மலையில் உற்பத்தியாகும் உப்பாறு வைகையின் துணையாறாகும். அழகர்மலையில் பொழியும் மழைநீர் ஓடை வழியாக பறம்பு கண்மாய்க்கு வருகிறது. பறம்புக் கண்மாயின் மொத்த பரப்பளவு 49 ஏக்கர் ஆகும். பறம்பு கண்மாய் வாயிலாக 36.84 ஏக்கர் நேரடியாக பாசனம் பெறுகிறது. இக்கண்மாய் தமிழரின் தொன்மையான நீர்பாசன மேலாண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.   


பறம்பு கண்மாய் நீர்வளத்துறை விவரம்:
  • அட்சய & தீர்க்க ரேகை: 10.103977, 78.302200
  • கொள்ளளவு (Capacity): 0.014 MCM 
  • முழுக் கொள்ளளவு (FTL): 151.48 M 
  • அதிகபட்ச நீர்க்கொள்ளளவு (MWL): 152.09 M 
  • கரையின் மட்டம் (TBL): 152.85 M 
  • ஆழம் (Storage Depth): 2.49 M 
  • பாசனம் பெரும் பகுதி (Ayacut): 14.91 ஹெக்டேர் 
  • நீர்ப்பிடிப்பு பகுதி (Catchment in Sq Km): 0.20 சதுர கிமீ (49 ஏக்கர்)
  • நீரின் பரவல் (Water Spread Area ): 1.20 ஹெக்டேர்
  • கலிங்கு (No of Weir): 1.0
  • கலிங்கு நீளம் (Weir Length): 3.04 M 
  • மடை (No of Sluice): 2.0
  • கரையின் நீளம் (Bund Length): 97.5 M 
  • நீர் வெளியேறும் திறன் (Discharge): 59.0 Cusec
https://madurai.nic.in/water-bodies-in-madurai-district என்கிற அரசின் இணையத்தில் இருந்து பறம்பு கண்மாய் குறித்து விவரங்கள் பெறப்பட்டது.

 பறம்பு கண்மாய் கல்வெட்டுகள்:
பறம்பு கண்மாய் கலிங்கு பகுதி அருகேயுள்ள பாறையில் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பறம்பு கண்மாய் வெட்டி அதற்கு கலிங்கு அமைத்து கொடுத்த செய்தியை கிபி 1238 ஆம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது.  அதன் பின் கிபி 1415 ஆம் ஆண்டு விஜயநகர மன்னன் மல்லிகார்ச்சுனராயரின் மகன் விருப்பாச்சிராயரின் கல்வெட்டில் திருநாராயண சம்பான் என்பவன்  கண்மாய் பராமரிப்புக்காக கொடுத்த காணிக்கை பற்றி குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் வடபறப்பு நாட்டு அழகர் திருவிடையாட்டம் பறம்பான திருநாராயண மங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வூரின் பெயர் திருநாராயண மங்கலம் என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 





மடைக்குழி கருப்பு: 
பறம்பு கண்மாய் கலிங்கு அருகே பூவரசமரத்தடியில் மடைக்குழி கருப்பு கோயில் உள்ளது. சோமகிரியான் வகையறா (மொட்டபருக்கை) இக்கோயிலையும், மடையை திறக்கும் உரிமையை கொண்டிருப்பதாக ஊரில் உள்ள பெரியவர்கள் தெரிவித்தனர்.




வரலாற்றுச் சுவடுகள்


பெருங்கற்கால சின்னங்கள்:
தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் என்பது கிமு 1000 முதல் கிபி வரை 200 இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் ஈமக்குழிகளை பெரிய பெரிய கற்களை கொண்டு அமைத்ததன் அடிப்படையில் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது. முதுமக்கள் தாழி, கற்பதுக்கை, கற்திட்டை, நெடுங்கல், கல்வட்டம், கற்குவை என பல வகை பெருங்கற்கால சின்னங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகிறது. கற்திட்டை (Dolmen), கற்பதுக்கை (Cist), கல்வட்டம் (Stone Circle), நெடுங்கல் (Menhir) உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு ஊராட்சியில் உள்ள மேலவளவு, ராசினாம்பட்டி, கைலம்பட்டி ஆகிய ஊர்களில் 50 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. ராசினாம்பட்டி  சோமகிரி கோட்டைபகுதியில்  காணப்படும் நெடுங்கல் ஒன்றை முனியாண்டி என்றும், கற்பதுக்கை ஒன்றை பட்டசாமி என்றும் மக்கள் வழிபாட்டு வருகின்றனர். இக்கோயில்களில் அருகில் கல்வட்டம், கற்பதுக்கையின் பலகை கற்கள் சில சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. விவசாயத்திற்கு இடையூறாக இருப்பதால் பெருங்கற்கால சின்னங்களின் தொன்மை மற்றும் முக்கியத்துவம் அறியாமல் பல இடங்களில் மக்கள் அகற்றிவிட்டனர். கைலம்பட்டி குதிரோடு பொட்டல் பகுதியில் காணப்பட்ட பெருங்கற்கால சின்னங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு இருக்கிறது.  தொல்லியல் அறிஞர் திரு. இரா. ஜெகதீசன் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் உள்ள பெருங்கற்கால சின்னங்களை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். 




















மேமலை கருப்புச்சாமி:

சோமகிரி கருப்பு என்று அழைக்கப்படும் கருப்பசாமியை மேமலை கருப்பு என்றே உள்ளூர் மக்கள் பேச்சு வழக்கில் அழைக்கிறார்கள். மேமலைக்கு சோமகிரி என்று பெயர் மாறிய பிறகு, மேமலை கருப்பு, சோமகிரி கருப்பு என்று மாறியிருக்கலாம். பெரிய கருப்பு, சின்ன கருப்பு, முத்து கருப்பு என மூன்று கருப்பசாமி திருவுருவங்கள் இக்கோயிலில் உள்ளன. அதில் முத்துகருப்புக்கு தான் கிடா, சேவல் உள்ளிட்ட இரத்த பலி கொடுக்கப்படுகிறது. பெரிய கருப்புக்கும், சின்ன கருப்புக்கும் பொங்கல் படையலாக வைக்கப்படுகிறது. 

சிவன் கோயில்:
















மலையபீர் (கந்தூரி நவ்வா):

சோமகிரி மலையின் கிழக்கு அடிவாரத்தில் கத்திரி நவ்வா என்றழைக்கப்படும் மலையப்பீர் இசுலாமிய வழிபாட்டு தளம் உள்ளது. கட்டுமானங்கள் ஏதுமின்றி மரங்கள் சூழ்ந்த வெட்டவெளி தர்காவாக காட்சியளிக்கிறது. இத்தளத்தில் முன்பு பெரிய நாவல் மரம் இருந்ததுள்ளது, அது வீழ்த்த பின் இன்னொரு நாவல் மரம் வைக்கப்பட்டுள்ளது. நாவல் மரத்தடியில் கந்தூரி கொடுக்கும் வழக்கமுள்ளதால், இவ்விடத்திற்கு பெயர் கந்தூரி நவ்வா என்று பெயர் வந்தது. கொடியேற்றத்துடன் கந்தூரி விழா துவங்குகிறது. சோமகிரி கருப்பு கோயில் மற்றும் மேலவளவு ஊர் திருவிழாவில் அனைத்து சமூக மக்களுடன் சேர்ந்து இந்த தர்கா மற்றும் இசுலாமியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தர்காவில் காணப்படும் நாவல் மரத்தின் அடியில் கிபி 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுல்தானின் காசு ஒன்றும் கிடைத்துள்ளது. இசுலாமியர்கள் குழந்தைகளுக்கு முதல் மொட்டை அடிக்கும் நிகழ்வு இவ்விடத்தில் நிகழுகிறது. 





தம்மம்: 

சோமகிரி மலையின் தெற்கு அடிவாரத்தில் இருளாண்டி கண்மாய் கரையில்  தம்பத்து (தம்மம்) என்றழைக்கப்படும் இசுலாமிய வழிபாட்டு தளம் அமைந்துள்ளது. ஆலமரத்தில் பச்சை கொடி, பீடத்தின் மீது விளக்கு ஏற்றும் தூண் என இசுலாமிய பெரியவரின் அடக்கத்தலம் (தர்கா) போன்றே காட்சியளிக்கிறது. இசுலாமியர்கள் குழந்தைகளுக்கு முதல் மொட்டை அடிக்கும் நிகழ்வு இவ்விடத்தில் நிகழுகிறது.





அம்மாச்சியம்மன் கோயில் : 
தம்மம் அருகே அம்மாச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அருவிமலை கருப்பசாமியும், அம்மாச்சியம்மனும் உள்ளனர். 




சோமகிரி கருப்பு கோயில்:





















சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள், கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு, கிபி 15 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு, கிபி 17 ஆம் நூற்றாண்டு சுல்தான் நாணயம், 200 ஆண்டுகள் பழமையான கோட்டைகள் என தொடர்ச்சியான வரலாற்று சான்றுகள் விரவிக்கிடக்கும் மேலவளவு பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 




பெருங்கற்கால சின்னங்கள், பிற்கால பாண்டியர் கல்வெட்டு, 
விருப்பாச்சிராயர் கல்வெட்டு, சுல்தான் நாணயம் 

சோமகிரி மலை: (உரல் கழுத்து பாறை)

கோட்டை: 

சுப்ரமணிய முருகன் கோயில்:

பறம்பு கண்மாய்:

மலைய பீர் தர்கா: 

வாலா சாகிப் நகரம்: 

கருப்பு கோயில்:

கார்த்திகை தீபம்: 

அழகுநாச்சியம்மன் கோயில் காடு: 
பட்டத்தரசி அம்மன் கோயில்    

முனியாண்டி கோயில்:
பட்டாசாமி கோயில்:

மேலவளவு படுகொலை: 
பல்லுயிர்கள்:

முறிமலை:






















































































https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/worship-of-neolithic-symbols-in-the-upper-reaches-/3829729

https://www.thehindu.com/news/cities/Madurai/new-chola-inscription-discovered-near-melavalavu/article69409598.ece











Ebird Melavalavu Checklist:
https://ebird.org/checklist/S213153754
https://ebird.org/checklist/S213151862


Melavalavu Butterflies Checklist:
Blue Mormon, Crimson Rose, Common Rose, Common Mormon, Common Jezebel, Common Castor, Common Gull, Plain Tiger, Blue Tiger, Sergent, Lime Butterfly, Psyche, Pioneer, Common Gull, Great Orange tip, White orange tip, Yellow Orange tip, Common Albatross, Chocolate Pansy, Small Salmon Arab, Common Wanderer, Common Emigrant, Small grass yellow, Three spot grass yellow, Common grass yellow, Common Pierrot, Angled Pierrot, African Babul Blue, Tiny Grass blue, Grass Jewel, Common Cerulean, Evening Brown

Somagiri Hillock Flora list 

Botanical Name - Vernacular Name

1 Abrus precatorius L. Kundumani
2 Acacia caesia (L.) Willd. Indu
3 Acacia horrida (L.) Willd. Karuvelam
4 Acacia leucophloea (Roxb.) Willd. Velvelam, Parambai
5 Acalypha alnifolia Klein ex Willd. Sinni
6 Acalypha fruticosa Forssk. Siru Sinni
7 Achyranthes aspera L. Nayuruvi
8 Actiniopteris radiata (Sw.) Link Mailsikai
9 Aegle marmelos (L.) Corrêa Vilvam
10 Aerva lanata (L.) Juss. Sirukanpeelai
11 Ailanthus excelsa Roxb. Vatthikuchi Maram
12 Alangium salviifolium (L.f.) Wangerin Alinjil
13 Albizia amara (Roxb.) Boivin Usilai
14 Albizia lebbeck (L.) Benth. Vagai
15 Alysicarpus monilifer (L.) DC. Panappul & Kasukatti
16 Andrographis echioides (L.) Nees Kopuramthangi
17 Anisochilus carnosus (L.f.) Wall. Karpuravalli
18 Anisomeles malabarica (L.) R.Br. ex Sims Peimiratti, Perunthumbai
19 Annona squamosa L. Seethapala
20 Aristolochia bracteata Retz. Aduthinnapalai
21 Aristolochia indica L. Thalai suruli and Tharasu kodi
22 Asparagus racemosus Willd. Thannervittan Kizangu
23 Atalantia monophylla DC. Kattunaragam, katu elumbitchai
24 Azadirachta indica A.Juss. Vembu
25 Azima tetracantha Lam. Mulsangu
26 Barleria prionitis L. Semmulli
27 Bauhinia racemosa Lam. Aaththi
28 Borassus flabellifer L. Panai
29 Cadaba trifoliata Wight & Arn. Manudukkurundu, Mara viluti
30 Calotropis gigantea (L.) Dryand. Erukku
31 Caralluma diffusa (Wight) N.E.Br. Siru Kalli
32 Cardiospermum halicacabum L. Mudakkathan Kodi
33 Cassia auriculata L. Aavaram
34 Cassia montana Náves ex Fern.-Vill. Kondrai
35 Cassia roxburghii DC. Senkondrai
36 Catunaregam spinosa (Thunb.) Tirveng. Madukarei
37 Chlorophytum borivilianum Santapau & R.R.Fern. Tiravamticham
38 Chromolaena odorata (L.)R.M.King & H.Rob. Pachilai
39 Cissus quadrangularis L. Pirandai
40 Clerodendrum inerme (L.) Gaertn. pinari Sangukuppi
41 Cocos nucifera L. Thennai maram
42 Commiphora mukul (Hook. Ex Stocks) Engl. Guglu
43 Croton bonplandianus Baill. Milagai poondu, Siru Kolunji
44 Cyanotis axillaris (L.) D.Don ex Sweet Valukkai pul
45 Cymbopogon citratus (DC.) Stapf Karpura pullu
46 Cymbopogon schoenanthus (L.) Spreng. Elumbichampul
47 Daturametal L. Karuoomathai
48 Delonix elata (L.) Gamble Vathanarayanan
49 Derris scandens (Roxb.) Benth. Seenikkodi, Athiral, thirudan kodi
50 Dichrostachys cinerea (L.) Wight & Arn. Vidathari
51 Diospyros cordifolia Roxb. Seenthil
52 Dodonaea viscosa (L.) Jacq. Virali
53 Ehretia microphylla Lam. Kuruvipalam
54 Euphorbia antiquorum L. Sadurakalli
55 Euphorbia cyathophora Murray Thithili poo
56 Euphorbia hirta L. Amman pacharisi
57 Ficus benghalensis L. Alamaram
58 Ficus religiosa L. Arasamaram
59 Furcraea foetida (L.) Haw. Sirupoonaikali
60 Gloriosa superba L. Senkanthal malar
61 Hemidesmus indicus (L.) R. Br. ex Schult. Nannari
62 Hibiscus micranthus L.f. Siddha mutti
63 Hippocratea obtusifolia Roxb. puramkodi
64 Hybanthus enneaspermus (L.) F.Muell. Orithal thamarai
65 Ichnocarpus frutescens (L.) W.T.Aiton Udargodi, palvalli,Manipilankodi
66 Indigofera aspalathoides DC. Sivanar Vembu
67 jasminum sps Malligai
68 Jatropha gossypiifolia L. Khattu Amanakku
69 Justicia tranquebariensis L.f. Thavasu Murungai
70 Leucas aspera (Willd.) Link Thumbai
71 Loranthus falcatus L.f. Pulluruvi
72 Millingtonia hortensis L.f. kattumalli
73 Mimosa pudica L. Thottal sinungi
74 Mollugo nudicaulis Lam. Kuttuthirai
75 Mollugo pentaphylla L. Parpadagapul
76 Morinda tinctoria Roxb. Manjanathi
77 Ocimum sanctum L. Thulasi
78 Oxystelma esculentum (L. f.) Sm. Oosipalai
79 Pavonia odorata Willd. Peramutti
80 Pedalium murex L. Yanai Nerunjil
81 Pergularia daemia (Forssk.) Chiov. Veliparuthi
82 Phyllanthus amarus Schumach. & Thonn. Kilanelli
83 Phyllanthus reticulatus Poir. Karumpoolachedi
84 Pongamia pinnata (L.) Pierre Pungai maram
85 Pouzolzia zeylanica (L.) Benn. Neerchinni
86 Prosopis juliflora (Sw.) DC. Seemai Karuvelam
87 Secamone emetica (Retz.) R. Br. ex Schult. Nilamarandai Kodi
88 Sida acuta Burm.f. Arivalmanai Poondu
89 Sida cordifolia L. Siddha mutti
90 Spermacoce hispida L. Natthaisoori
91 Stachytarpheta × abortiva Danser Seemai Nayuruvi
92 Tamarindus indica L. Puliyamaram
93 Tecoma stans (L.) Juss. ex Kunth Nagasambagam, Sornapatti
94 Tectona grandis L.f. Thekku
95 Tephrosia purpurea (L.) Pers. Kolunji
96 Thevetia peruviana (pers) K.Schum Manjal arali
97 Tiliacora acuminata (Lam.) Miers Perum Kattukodi
98 Tragia involucrata L. Senthatti
99 Tribulus terrestris L. Nerunjil
100 Trichodesma indica R.Br. Kavilthumbai
101 Triumfetta rhomboidea Jacq. Adaiyotti
102 Ulmus integrifolia Roxb. Aavimaram
103 Wrightia tinctoria R.Br. Veppalai
104 Xanthium strumarium L. Marul oomathai
105 Ziziphus oenoplia (L.) Mill. Sooraimullu
106 Ziziphus xylopyrus (Retz.) Willd. Kottai Ilanthai
107 Ziziphus montana W.W. Sm. Malai Ilanthai
108 Vachellia planifrons (Wight & Arn.) Ragup., Seigler, Ebinger & Maslin
109 Commiphora caudata (Wight & Arn.) Engl.
110 Vachellia leucophloea (Roxb.) Maslin, Seigler & Ebinger
111 Barleria longiflora L.f.
112 Crotalaria digitata Hook.
113 Oldenlandia herbacea (L.) Roxb.
114 Oldenlandia corymbosa L.
115 Oldenlandia umbellata L.
116 Ficus mollis Vahl
117 Gyrocarpus americanus Jacq.
118 Tecoma stans (L.) Juss. ex Kunth
119 Eragrostiella bifaria (Vahl) Bor
120 Oropetium thomaeum (L.f.) Trin.
121 Cynodon dactylon (L.) Pers.
122 Echinochloa colona (L.) Link
123 Chrysopogon aciculatus (Retz.) Trin.
124 Cymbopogon caesius (Hook. & Arn.) Stapf
125 Heteropogon contortus (L.) P.Beauv. ex Roem. & Schult.
126 Saccharum spontaneum L.
127 Eulophia epidendraea  (J.Koenig ex Retz.) C.E.C.Fisch.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சியில் அமைந்துள்ள சோமகிரி மலையும் இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள பறம்பு கண்மாயும் (புல எண் 586) வரலாற்று அடிப்படையிலும், பல்லுயிரிய வகைமை அடிப்படையிலும்  பல்லுயிரிய மரபு தலமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க தகுதி வாய்ந்த பகுதியாகும். அதனை கருத்தில் கொண்டு சோமகிரி மலை மற்றும் பறம்பு கண்மாய் பகுதியை பல்லுயிரிய வகைமை சட்டம் 2002இன் கீழ் (Biological Diversity Act, 2002, Section 37) பல்லுயிரிய மரபு தளமாக அறிவித்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF) சார்பாக 21.04.2025 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. 

மனுவின் விவரம்

பொருள்: சோமகிரி மலை மற்றும் பறம்பு கண்மாய் பகுதியை பல்லுயிரிய மரபு தளமாக அறிவித்து பாதுகாப்பது தொடர்பாக 

மனு ரசிது எண்: 34977 

மனு நாள்: 21.04.2025 

இடம்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை



சோமகிரி மலை மற்றும் பறம்பு கண்மாய் பகுதியை பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க கோரி மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையால் கொடுக்கப்பட்ட மனுவின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனு எண்: 34977
மனு நாள்: 21.04.2025
இடம்: மதுரை ஆட்சியர் அலுவலகம்

 

மேலவளவு கிராமசபை தீர்மானம்:

மேலவளவு ஊராட்சியில் 01.05.2025 அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மேலவளவு சோமகிரி மலை மற்றும் பறம்பு கண்மாய் பகுதியை பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க வேண்டுமெனவும், சோமகிரி மலையில் உள்ள இராஜராஜ சோழன் காலத்து (கிபி 10) கல்வட்டும், பறம்பு கண்மாய் கலிங்கு பகுதியில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும் (கிபி 13), விருப்பாச்சிராயர் காலத்தும் கல்வெட்டும் (கிபி 15) காணப்படுகிறது. அதனை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.






மதுரை சோமகிரிமலை - பறம்பு கண்மாய், மாலையம்மன் கோயில்காடு, வெள்ளமலை கோயில்காடு ஆகிய மூன்று பகுதிகளை ''பல்லுயிரிய வகைமை சட்டம் 2002இன் கீழ் (BIOLOGICAL DIVERSITY ACT, 2002)'' பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க வேண்டுமென மேலவளவு ஊராட்சியில் கடந்த 10.10.2025 அன்று நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. 



மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வறள் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை